பனியன், கைலியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலத்துக்கு வந்த தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்: வைரலாகும் வீடியோ!

பனியன், கைலியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலத்துக்கு வந்த தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர், சட்டை இல்லாமல் பனியன், கைலியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்து வந்து நாற்காலியில் அமர்ந்து, அதிகாரிகளிடம் அதிகார தொனியில் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் இடைச்செறுவாய் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் வெங்கடேசன். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். எப்படி தெரியுமா? மேல் சட்டை இல்லாமல், கைலி மற்றும் முண்டா பனியன் அணிந்தபடி அரைகுறை ஆடையுடன் வந்திருக்கிறார். வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் ஜம்பமாக அமர்ந்து கொண்டு அதிகாரிகளிடம் ஒருமையில் பேசுகிறார். அதுவும், அதிகார தொனியில் அதிகாரிகளை மிரட்டுவது போல பேசுகிறார்.

இந்த ஒட்டுமொத்த காட்சிகளையும் யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் தி.மு.க.வினரின் அராஜகப் போக்கை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it