திருமா, வீரமணிக்கு பாண்டே கொடுத்த அடி… என்னன்னு தெரிஞ்சுக்க உள்ள வந்து படி!

திருமா, வீரமணிக்கு பாண்டே கொடுத்த அடி… என்னன்னு தெரிஞ்சுக்க உள்ள வந்து படி!

Share it if you like it

திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து தம்பி ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு மாஸ் பதிலை வழங்கியுள்ளார் ரங்கராஜ் பாண்டே. இக்காணொளி, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தமிழகத்தில் ஹிந்து கடவுள்களை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, திராவிடர் கழகத்தினர் கருப்பர் கூட்டம் என்றொரு அமைப்பை வைத்துக் கொண்டு, ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். அந்தவகையில், சாணக்கியா இணையதள ஊடகத்தின் நிறுவனராக இருக்கும் ரங்கராஜ் பாண்டே விடம் தம்பி ஒருவர் நேர்காணல் நடத்தியுள்ளார். இதற்கு, பாண்டே கூறியதாவது;

பெரியார், வீரமணி, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் அனைவருமே ஹிந்து மதத்தில் பிறந்தவர்கள் தான். ஹிந்து மதத்தில் உள்ள தவறுகளை இவர்கள் சுட்டிக்காட்டுவது நியாயம் தானே என்று நெறியாளர் தம்பி கேள்வி கேட்கிறார். இதற்கு, ரங்கராஜ் பாண்டே, உங்கள் பார்வைக்கு அடுத்தவர்களை திட்டுவது தான் நியாயமா? சீர்திருத்தம் பேச வேண்டும் என்றால் அதற்கான முறை இருக்கு, ஈவ் டீசிங்கிற்கு ஆரம்பமே கண்ணன் தான் என்று இவர்கள் கூறுகிறார்கள் இதுதான் சீர்திருத்தமா? புரட்சியா? நாங்கள் அடுத்தவர்கள் குடும்பத்தை பற்றி பேசினால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? என் குடும்பத்தை விமர்சனம் செய்வது தான் சீர்திருத்தமா? முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். உங்கள் கட்சியில் உங்களது இயக்கங்களில் 150 பாலியல் குற்றச்சாட்டு இருக்கு. அதுகுறித்து, எப்பொழுதாவது பேசி இருக்கிறீர்களா? விமர்சனம் செய்து இருக்கிறீர்களா என கேள்வி கேட்ட தம்பியை திணறடித்தள்ளார் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it