சமீபத்தில் ஸ்ரீ ராம ஜன்மபூமி அறக்கட்டளையை சார்ந்தவர்கள் பிரதமர் வீட்டுக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்து, 2024 ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி கோவிலில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் உள்ள கர்ப்பகிரஹத்தில் ஸ்ரீராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்றதற்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையில்,ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி முடிந்த பின் அடுத்த 60 நாட்களுக்கு தமிழக மக்கள் இலவசமாக ரயிலில் அயோத்தி சென்று ராமரை தரிசித்து வரலாம். இதற்கான முழு செலவையும் தமிழக பாஜக ஏற்கும் என்று கூறியுள்ளார்.