பல்லாவரமா, பெரம்பூரா… பாவம் அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு… பொன்முடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பல்லாவரமா, பெரம்பூரா… பாவம் அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு… பொன்முடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

சட்டமன்றத்தில் பெரம்பூர் தொகுதி என்பதற்கு பதிலாக பல்லாவரம் தொகுதி என்று அமைச்சர் பொன்முடி மாற்றிப் படித்ததை வைத்து, பாவம் அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு என்று நெட்டிசன்களி கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடர்ந்து, தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்தி சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.டி.சேகர் எழுந்து, எனது தொகுதி அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஆகவே, எனது தொகுதியில் குறைந்தபட்சம் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியாவது அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிதான் பல்லாவரம் என்றார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பல்லாவரம் தொகுதி இல்லை, பெரம்பூர் தொகுதி என்று திருத்தினார். அப்படி இருந்தும் மீண்டும் பல்லாவரம் தொகுதி என்று சொன்ன பொன்முடி, பிறகு தனது தவறைத் திருத்திக்கொண்டு பெரம்பூர் தொகுதி என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாவம் அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு என்று வடிவேலு காமெடியை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

இது அந்த கலாய்க்கும் வீடியோ…


Share it if you like it