மங்கலமாக ஆயுதபூஜையோடு பெரியார் ஈ வே ரா மணியம்மை கல்லூரி பேருந்து – பகுத்தறிவு சனாதனத்திடம் மண்டியிட்டு சரணடைந்த தருணம் !

மங்கலமாக ஆயுதபூஜையோடு பெரியார் ஈ வே ரா மணியம்மை கல்லூரி பேருந்து – பகுத்தறிவு சனாதனத்திடம் மண்டியிட்டு சரணடைந்த தருணம் !

Share it if you like it

நீங்கள் மேலே பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் தமிழகத்தில் சனாதன எதிர்ப்பு ஒன்றையே மூலாதாரமாகக் கொண்ட திராவிடர் கழகத்தின் வழியில் வந்த பெரியார் ஈவேரா மணியம்மை கல்லூரி பேருந்து. எந்த ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை ஏளனப்படுத்தி மேடைகளில் முழங்குகிறார்களோ? அதே சரஸ்வதி பூஜை அன்று கல்லூரி பேருந்து சந்தனம் குங்குமம் பூ அலங்காரம் உள்ளிட்ட மங்கள அடையாளங்களோடு ஆயுத பூஜை செய்து பேருந்து எலுமிச்சை பூசணி தேங்காய் உள்ளிட்ட பூஜை திருஷ்டி அகற்றும் சடங்கையும் செய்து கொண்டு சனாதனத்தின் வழியில் நிமிர்ந்து நிற்கிறது. ஈவேராவின் பெயரைச் சொல்லி இவர்கள் பேசும் பகுத்தறிவும் சனாதன விரோதமும் ஊருக்கு மட்டுமே உபதேசம் . உண்மையில் சனாதனத்தின் அடி நாதம் அதன் ஆன்மீகம் இந்தப் போலி பகுத்தறிவாளர்களை மண்டியிட வைத்திருக்கிறது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சியம்.

திராவிடர் கழகம் என்ற அமைப்பும் திமுக என்ற கட்சியும் தொடங்கப்பட்டதே தமிழகத்தில் இருக்கும் ஆலயங்கள் அதன் பொக்கிஷங்களை அடியோடு அடித்து ஒழிக்க வேண்டும். ஆன்மீக வழியில் வாழும் ஹிந்து மக்களை ஆன்மீக பாரம்பரிய அடையாளம் மற்றும் மக்களாக மாற்ற வேண்டும். அதன் காரணமாக ஏற்படும் வெற்றிடத்தை பயன்படுத்தி அவர்களை அந்நிய மதம் ஏற்கச் செய்ய வேண்டும் . அந்த அந்நிய மத ஆதரவு மனநிலமையில் தமிழகத்தை மதரீதியாக துண்டாடி அந்நிய தேசத்தின் காலனி நாடாக மாற்ற வேண்டும் . அதன் மூலம் இந்த தேசத்தில் அந்நிய மதச்சார்பு காலனி ஆதிக்கத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டும். பாரத தேசத்தை பல துண்டுகளாக சிதறடிக்கவும் வேண்டும் என்ற ஹிந்துஸ்தானத்தின் தேசியத்திற்கும் தர்மத்திற்கும் எதிரான பன்முக அன்னையர் சதியின் உள்நாட்டு முகமாகத்தான் உருவானது. இதன் அடிநாதமான நீதி கட்சியும் அதன் முழு முதல் சித்தாந்தமும் ஆன ஆரிய திராவிட சித்தாந்தங்களும் பார்ப்பன எதிர்ப்பு கோஷங்களும் அடிப்படையில் இந்து விரோதம் இந்திய விரோதக் கொள்கைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டவை.

இன்றளவும் சமூக நீதி சமநீதி என்ற பெயரில் திராவிடமும் திமுகவும் திரும்பிய பக்கமெல்லாம் ஆரியம் பார்ப்பனம் பாசிசம் திராவிடம் என்று சகட்டுமேனிக்கு வரலாற்று திரிபு களையும் கால்டுவெல் வகையறாக்களின் கதைகளையும் மேடையில் அள்ளி விடுவது . அடிப்படையில் தமிழகத்தின் பூர்வீக வரலாறும் பாரதத்தின் நீண்ட நெடிய சுதந்திர போராட்ட வரலாற்றையும் அறிந்திடாத இந்த தேசத்தின் மக்கள் இவர்களின் பசப்பு வார்த்தையை மயங்கி அப்படியே இவர்களை பின்தொடர்ந்து போனார்கள். அதன் விளைவுதான் என்று தமிழகத்தில் மூன்று தலைமுறை தமிழகத்தின் பாரம்பரியமும் அறியாமல் பாரதத்தின் பூர்வீகமும் தெரியாமல் வேர்ச்ச மரங்களாகி திராவிடத்தின் பிடியும் சிக்கி சீரழியும் துரதிருஷ்ட நிலை நீடிப்பதன் காரணம். தினமும் மேடைக்கு மேடை சனாதனத்தை எதிர்ப்போம் அழிப்போம் என்று பேசும் திராவிடர் கழகத்தின் மற்றும் திமுகவின் தலைவர்கள் எல்லோரும் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் சனாதன தர்மத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பவர்கள் தான். கடவுள் இல்லை என்னும் நாத்திகம் எல்லாம் ஊருக்கு மட்டுமே உபதேசம். உண்மையில் இன்றளவும் அவரவர் குலதெய்வத்திற்கான ஆண்டு வரியும் குடும்பத்திற்கான தலைக்கட்டு தட்சணையும் முதலில் தவறாமல் செலுத்துபவர்கள் தான் இந்த பகுத்தறிவு சிகாமணிகள் .

தமிழகம் முழுவதிலும் மேடை போட்டு ஊருக்கு ஊர் பெண் அடிமைக்கு எதிராக முற்போக்கு பேசிய திராவிடர் கழகம் பெண்ணியம் காப்போம் என்று தாலிய அகற்றும் விழாவை முன்னெடுத்தது . இதில் இந்து தர்மத்திற்கும் வாழ்வியலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாத பலரும் நாடகமாக மேடை ஏற்றப்பட்டு அவர்கள் மேடையிலேயே தாலி அகற்றும் போலி பகுத்தறிவு வாதம் நிலைநாட்டப்பட்டது. ஆனால் இந்த விழாவை முன்னின்று நடத்திய தி க வின் வீரமணி சுப வீரபாண்டியன் குளத்தூர் மணியரசன் உள்ளிட்ட அனைத்து தீக்காவின் தலைவர்களும் அவர்களின் மனைவிமார்கள் கழுத்தில் மங்கல நாணுடன் கூடிய திருமாங்கல்யத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விழாவில் எந்த ஒரு மேடையிலும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தலைவர்களோ அவர்களின் குடும்பத்து பெண்களை மேடை ஏற்றி தாலி அகற்றும் நிகழ்வை முன்னெடுக்கவில்லை என்பதே இவர்களின் பகுத்தறிவு வாதம் எவ்வளவு போலியானது? என்பதற்கு கண்கண்ட சாட்சியம்.

திமுகவின் தலைமை குடும்பத்தில் கருணாநிதி காலம் தொட்டே ஆண்கள் வெளிப்படையாக இந்து துவேசம் பேசுவார்கள். மேடைக்கு மேடை இந்து ஆலயங்களை தகர்க்க வேண்டும் என்ற முழங்குவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் தில்லை நடராஜரையும் காஞ்சி சங்கர மடத்தையும் பீரங்கிக் கொண்டு தகர்க்கும் நாள் எந்நாளோ? அதுவே எனக்கு பொன்னால் என்று மேடையில் கருணாநிதி முழங்குவார். ஆனால் குரு தசையின் காரணமாக அதற்கு பரிகாரமாக கால் நூற்றாண்டுகள் அவர் கழுத்தில் மஞ்சள் துண்டோடு வலம் வந்தது தான் அவரை உண்மையான பகுத்தறிவு. மேடையில் இந்துக்கள் என்றால் திருடன் என்று பேசுவார். சாமியார்களை எல்லாம் வேஷதாரிகள் கபடதாரிகள் என்ற சகட்டுமேனிக்கு வசை பாடுவார் . ஆனால் புட்டபர்த்தி சாய்பாபாவை வீட்டிற்கு அழைத்து விசேஷ தட்சணைகள் வழங்கி அவரிடம் ஆசி பெற்றுக் கொள்வார்கள்.

தற்போதைய திமுகவின் தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் மேடைக்கு மேடை சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுவார் . ஆனால் அவரின் மனைவி இந்து அறநிலையத்துறையின் விஐபி தரிசனத்தோடு தமிழகத்தில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் வலம் வருவார். திருப்பதி முதல் காசி வரை தரிசனம் செய்து காணிக்கை வழங்குவார். பல இடங்களில் ஆலய ஆகம விதிகளை மீறி கோவில் தேர்தலில் ஏறி நிற்பது தெய்வ திருமேனிகளுக்கு பிடிக்கும் திருக்குடைகளை தனக்கு பிடித்துக் கொள்வது என்று அதிகாரத்தில் அத்துமீறவும் செய்வார். தேவரின் குருபூஜை ஆலய விழாக்களில் கொடுக்கும் விபூதிகளை அளிக்கும் அதே ஸ்டாலின் தான் இன்று வரை ஆலயத்தின் வருமானங்களை முக்கிய வருவாயாக நம்பி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காகவே இந்து அறநிலையத் துறையை நிர்வகித்தும் வருகிறார். வைதீக முறையிலான திருமண சடங்குகளை ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் விமர்சனம் செய்த அதே ஸ்டாலின் தனது 60 ஆம் ஆண்டு திருமண விழாவை தனது மனைவியோடு சனாதான வழியில் வைதீக முறைப்படி தான் செய்து கொண்டார். இன்றளவும் அவரது வீட்டில் அரசியல் நிகழ்வுகளில் எல்லாம் நேரம் காலம் முகூர்த்தம் யாவும் சனாதன வழிப்படையில் பூஜை புனஸ்காரங்கள் யாவும் வேத விற்பன்னர்கள் வழியில் தான் நடப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மேடை போட்டு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதி நானும் ஒரு கிறிஸ்தவர் எனது மனைவியும் ஒரு கிறிஸ்தவர் என்று வாக்கு வங்கி அரசியலுக்காக நாடகமாடும் அடுத்த தலைமுறை வாரிசு மட்டுமே. இன்று சிறுபான்மை வாக்கு வங்கிக்காக அகமதாபாத் மைதானத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டதை மத ரீதியான அரசியல் சங்கிகளின் துவேஷம் என்று மலிவாக பேசும் இதே உதயநிதி எதிர்வரும் தேர்தலில் இந்து மக்களின் வாக்கு வங்கிக்காக அதே ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தையும் ஜெய்ஹிந்த் கோஷத்தையும் போடவும் தயங்க மாட்டார் என்பதே உண்மை. மேடைக்கு மேடை முற்போக்கும் பகுத்தறிவும் பேசுபவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வையும் முகூர்த்தம் பார்த்து செய்பவரே. இதே உதயநிதி அவரது தாயார் நாள் நட்சத்திரம் பார்த்து வைத்த நேரத்தில் தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டதே இவர்களின் போலி பகுத்தறிவிற்கு சாட்சியம். வாக்கு வங்கி அரசியலுக்காக இன்று விநாயகர் சதுர்த்தியை களிமண் பொம்மை என்று ஏளனம் பேசிய இதே உதயநிதியும் திமுகவும் எதிர்காலத்தில் பிள்ளையார் சிலைகளை கைகளில் ஏந்தி இந்து வாக்கு வங்கிக்காக விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் காலமும் வரும். அப்போது இவர்களின் உண்மையான பகுத்தறிவும் அதன் பின்னிருக்கும் வாக்கு வங்கி அரசியலும் வெட்ட வெளிச்சமாக இங்குள்ள சிறுபான்மை மக்களுக்கும் புரியும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பேசும் இதே திமுகவின் தலைவர்கள் இன்றளவும் பார்ப்பன புரோகிதர்கள் வேத விற்பன்னர்களை மையமாக வைத்து மட்டுமே தங்களது வீடுகள் செய்யும் ஹோமங்கள் விசேஷ பூஜைகளை செய்து வருகிறார்கள். தங்களது இல்லங்களின் துக்க நிகழ்வுகள் ஈம காரியங்களில் கூட பார்ப்பன புரோகிதர்களை மட்டுமே முன்வைத்து செய்கிறார்கள். எங்கும் எதிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழியில் அவர்கள் அர்ச்சகர்கலாகிய பார்ப்பனர் அல்லாத எவரையும் முன்னிறுத்தி எந்த ஒரு நிகழ்வையும் இதுவரையும் செய்ததில்லை என்பதே அவர்களின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் பின்னிருக்கும் போலி சமநீதிக்கு அடையாளம். ஆலயங்களில் சமஸ்கிருதம் கூடாது தமிழ் வழியில் தான் அர்ச்சனை வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை பேசும் . ஆனால் அதே இந்து அறநிலையத்துறை அமைச்சரும் அவரின் மனைவியும் எந்த ஒரு ஆலயத்திலும் இதுவரையில் தமிழ் வழியில் அர்ச்சனை செய்தார்களா? என்று கேட்டால் பதில் வராது. திமுகவின் தலைமை குடும்பம் தொடங்கி நிர்வாகிகள் மூத்த அமைச்சர்கள் வரையிலும் அனைவரும் பார்ப்பன வேத விற்பன்னர்களின் சமஸ்கிருத மந்திரங்களோடு தான் பூஜைகளையும் நமஸ்காரங்களையும் செய்து வருகிறார்கள். இதுதான் இவர்களின் உண்மையான தமிழ் பற்று.

ராமரின் திருவுருவப்படத்தை அவமதித்த அதன் மூலம் தான் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை கிடைத்து ஆட்சி அமைக்க முடிந்தது என்று பேசிய அதே திராவிடர் கழகமும் திமுகவும் தான் இன்று அயோத்தி ராமஜன்ம பூமி கோவில் விவகாரத்தில் பாஜக மத அரசியல் செய்கிறது என்று நடுநிலை பேசுகிறது. இதே தமிழகத்தில் இருந்து தான் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு அதிக அளவில் நன்கொடைகள் கிடைக்கப்பெற்றது என்பதே இங்கிருக்கும் போலி பகுத்தறிவாளர்களின் தோல்விக்கு அடையாளம். அவர்களின் பகுத்தறிவும் அதன் பின்னிருக்கும் இந்து விரோதமும் பாரதத்தின் சனாதனவாதிகளிடமும் ஹிந்துஸ்தானத்தின் ஆன்மிகத்திடமும் முழுமையாக சரணாகதி அடைந்து மண்டியிட்டு விட்டது என்பதற்கு சாட்சியம். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சனாதனத்தின் தர்மம் அக்னியைப் போல தன்னை பரிசுக்கும் எவரையும் தனது ஆகும் அக்னியைப் போல தன்னை சுரேஷிக்கும் இந்து துவசிகளையும் மெல்ல மெல்ல தனதாக்கி வரும் அடையாளம் . சனாதனம் தமிழகத்தில் இருக்கும் இந்த போலி பகுத்தறிவுவாதிகளையும் ஒருநாள் வெளிப்படையாக சனாதனத்தின் மண்டியிட வைக்கும். அன்று தமிழகம் தான் இழந்த ஆன்மீக பெருமைகளையும் பாரம்பரிய பொக்கிஷங்களை எல்லாம் மீட்டெடுத்து காலம் கடந்த ஆன்மீக பூமியாக கம்பீரமாக மிளிரும். அந்நாளில் தமிழகத்தில் இருக்கும் இந்து ஆலயங்கள் எல்லாம் திராவிடத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு உலக சனாதனிகளின் பொதுவான ஆன்மீக பொக்கிஷமாக பக்தியோடு மிளிரும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

blank

Share it if you like it