மயிலாடுத்துறையை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் வளர்ந்து வரும் செல்ல பிராணிக்கு சீமந்தம் கொண்டாடிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு உட்பட மதினா நகரில் பெற்றோருடன் வசித்து வரும் நித்திஷ், சிவராஜ் என்ற சிறுவர்கள் தங்களது உறவினர் வீட்டில் இருந்து நாய் குட்டி ஒன்றினை எடுத்து வந்து வளர்த்துள்ளனர். மேலும், அதற்கு ‘சுக்கி’ என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், சுக்கி தற்பொழுது கர்ப்பமாக உள்ளது. இதையடுத்து, அந்த செல்ல பிராணிக்கு அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சீமந்தம் கொண்டாடிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.