ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க.வை அடித்து நொறுக்குவோம்: ஜவாஹிருல்லா திமிர் பேச்சு!

ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க.வை அடித்து நொறுக்குவோம்: ஜவாஹிருல்லா திமிர் பேச்சு!

Share it if you like it

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தால், ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க. ஆகிய அமைப்பினரை அடித்து நொறுக்குவோம் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமிராக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) என்கிற அமைப்பு. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினருக்கு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானத்தை மோதி தகர்த்த சிமி, அல்கொய்தா, தாலிபான்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த அமைப்பினர்தான் பல்வேறு வன்முறைகளை அரங்கேற்றினர், அரங்கேற்றியும் வருகின்றனர். இதனால், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பி.எஃப்.ஐ. அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் நடந்த ராமநவமி ஊர்வலம், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளில் குஜராத், கோவா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஹிந்துக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதும், டெல்லியில் துப்பாக்கியால் சுட்டதும், கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கியதும் பி.எஃப்.ஐ. அமைப்பினர்தான் என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், பி.எஃப்.ஐ. ஒரு பயங்கரவாத அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த அமைப்பினர் கத்தி வீசுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, இந்த அமைப்பைத் தடை செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்த செய்தியும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில்தான், பி.எஃப்.ஐ. அமைப்பு சார்பில் தமிழகத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “மோடியே நீ மர்ம பெட்டியில் கைவைத்திருக்கிறாய். அதாவது, குழவிக் கூட்டில் கைவைத்திருக்கிறாய். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யலாம் என்று நீ கனவு காண்கிறாய். அப்படி நீ தடை செய்தால் கையை கட்டிக் கொண்டு வீட்டிலே உக்கார்ந்திருப்போம் என்று நினைக்கிறாயா? உன் கனவை தகர்க்கக் கூடிய வகையிலே முஸ்லீம்கள் ஒன்று திரண்டு நிற்போம். எங்களது இரும்புக் கரங்களை கொண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸையும், பா.ஜ.க.வையும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பையும் சுக்கு நூறாக்குவோம்” என்று திமிராகப் பேசியிருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் மூர்க்கத்தனமாகப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொதுவெளியிலேயே மக்கள் மத்தியில் கொலை மிரட்டல் விடுத்து பேசினர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். பலமுறை பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்து பேசியிருக்கிறார்கள். தற்போதும், ஜவாஹிருல்லா பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஹிந்து அமைப்புகளை அடித்து நொறுக்குவோம் என்றும் பேசியிருக்கிறார்.

இதற்கு காரணம், தி.மு.க.தான் என்று குற்றம்சாட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தமிழகத்தில் தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக பல்முனைத் தாக்குதல்கள் நடக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் அதிகளவில் இருக்கிறது. அதேபோல, கிறிஸ்தவ மிஷனரிகளும் மத மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபடுகின்றனர். இதையெல்லாம் தி.மு.க. அரசு கண்டுகொள்வதில்லை. இதன் விளைவே, தற்போது பிரதமருக்கும், ஹிந்து அமைப்புகளுக்கும் எதிராக மிரட்டல் விடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Share it if you like it