தயவுசெய்து இந்த சிஏஏ சட்டம் சொல்வது என்ன என்பதை அனைவரும் படியுங்கள் – அமைச்சர் எல்.முருகன் !

தயவுசெய்து இந்த சிஏஏ சட்டம் சொல்வது என்ன என்பதை அனைவரும் படியுங்கள் – அமைச்சர் எல்.முருகன் !

Share it if you like it

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

பழைய குடியுரிமை சட்டங்களின்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக நுழைந்தவர்கள் 11 ஆண்டுகள் இங்கு வசித்த பிறகே குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும். புதிய சிஏஏ சட்டத்தின்படி இந்த அவகாசம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அமைச்சர் எல்.முருகன் அவர்களிடம் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எல்.முருகன், தயவுசெய்து இந்த சிஏஏ சட்டம் சொல்வது என்ன என்பதை அனைவரும் படியுங்கள். இந்த சிஏஏ யாருக்கு பயன் யாரை எதிர்க்கிறது என்பதை படியுங்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. சிஏஏ வால் என்ன பாதிப்பு என்பதை படியுங்கள். சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *