தமிழர் திருநாள் என சிறப்பித்துக் கூறப்படும் பண்டிகையே பொங்கல் திருநாள் !

தமிழர் திருநாள் என சிறப்பித்துக் கூறப்படும் பண்டிகையே பொங்கல் திருநாள் !

Share it if you like it

இந்துக்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாட கூடியவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறு இவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமானதொரு பண்டிகையாக பொங்கல் திருநாள் காணப்படுகின்றது.

அதாவது தமிழர்களின் நன்றி மறவாத தன்மை, விசுவாசம் என்பவற்றை பறைசாற்றுவதாக இந்த பொங்கல் திருநாள் அமைந்திருப்பதனை நாம் காண முடியும்.

தமிழர் திருநாள் என சிறப்பித்துக் கூறப்படும் ஒரு பண்டிகையாக பொங்கல் திருநாள் காணப்படுகின்றது. அதாவது தமிழர்களின் கலாச்சாரத்தை இந்த உலகிற்கு உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாக இந்த திருநாள் காணப்படுகின்றது.

வேளாண்மையாய் அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய ஜீவனோபாயத்தை கழிக்க கூடிய தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர்.

பொங்கல் திருநாளின் வரலாறு
தைப்பொங்கல் திருவிழாவானது உலகில் வாழக்கூடிய அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியை தங்களுடைய நாட்காட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நீண்ட பயணத்தின் தொடக்கத்தை கொண்டாடும் விதத்தில் தை மாதம் இந்த பொங்கல் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

வேளாண்மை செய்யக்கூடிய உழவர்கள் தங்களுடைய அறுவடைகள் முடிந்த பின்னர் சூரிய பகவானுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையிலே இப்பண்டிகை கொண்டாடப்படுவதனால் இது உழவர் திருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

யோகி பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதனை காணலாம்.

இந்த வகையில் பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பழமையான ஒரு பண்டிகை எனவும் இது பற்றிய அதிகமான பதிவுகள் சோழர் காலத்தில் கிடைக்க பெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சிகளின் வழி தெரியவந்துள்ளன.

தைப்பொங்கல்
பொங்கல் பண்டிகையின் பிரதானமான தினம் தைப்பொங்கல் தினமாகும். அதாவது தை மாதம் முதலாம் திகதி இது கொண்டாடப்படுகின்றது.

இந்த நாள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டுக்கு முன் கோலங்கள் இட்டு, அதன் நடுவே அடுப்புக் கூட்டி புதுப்பானையில் பொங்கல் பொங்குவர். அதன் பின்னர் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக புது தானியங்கள், புது காய்கறிகள், கரும்பு மற்றும் பொங்கல் அனைத்தையும் சேர்த்து படையல் போட்டு பூஜைகளை நிகழ்த்துவார்கள்.

இவ்வாறு பூஜைகள் முடிந்த பின்னர் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கலை உண்டு மகிழ்ந்து இந்த தைப்பொங்கலைக் கழிப்பர்.

மாட்டுப் பொங்கல்
தைப்பொங்கலுக்கு மறுநாள் உழவர்களுக்கு, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பட்டி பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் என்பது கொண்டாடப்படுகின்றது.

இந்நாளில் மாடுகள் குளிக்க வைக்கப்பட்டு, அதன் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அதனை அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபடுவர்.

அத்தோடு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு அம்சமான ஜல்லிக்கட்டும் இந்த மாட்டுப்பொங்கல் தினத்தில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணும் பொங்கல்:
காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்
ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம்,
உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற
வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு
நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.


Share it if you like it