மீண்டும் அமைச்சராகும் பொன்முடி !

மீண்டும் அமைச்சராகும் பொன்முடி !

Share it if you like it

‘பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டும்’ என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, பரிந்துரை கடிதம் (மார்ச் 13) எழுதியிருந்தார். அதை ஆளுநர் ஏற்கவில்லை. கடந்த 17-ம் தேதி மறுப்பு தெரிவித்தார். இதனால் 18-ம் தேதி இதுதொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு.

அந்த வழக்கில் நேற்று (மார்ச் 20) உச்சநீதிமன்றம் ஆளுநரை எச்சரித்திருந்தது. இந்நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று தீர்ப்பு வெளியானதில் இருந்து ‘ஆளுநர் தனது முடிவை மாற்றிக்கொள்வாரா? பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பாரா’ என இன்று காலை வரை தமிழக அரசு காத்திருந்தாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான திமுக பிரசார பயணம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளதால் அதற்கு முன் இப்பணிகள் முடிவடைய திமுக தரப்பு எதிர்பார்த்துள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான தகவலின்படி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 3.30 மணி அளவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பாரதியார் மண்டபத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *