2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்… பி.எஃப்.ஐ. பேச்சாளர் திமிர் பேச்சு!

2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்… பி.எஃப்.ஐ. பேச்சாளர் திமிர் பேச்சு!

Share it if you like it

2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிக் காட்டுவோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இளைஞர் அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநாடும், இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய நிர்வாகிகள் பலரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து பேசினர். ஒரு சிலர் காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசினர். இன்னும் சிலர் இந்தியாவில் இஸ்லாமை பரப்புவது குறித்து பேசினர். இந்த மாநாட்டில்தான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர், 2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிக் காட்டுவோம் என்று சூளுரைத்திருக்கிறார்.

இதுகுறித்து அப்பேச்சாளர் மேலும் கூறுகையில், “மோடி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார், புதிய இந்தியா பிறக்கப் போகிறது, புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவும் இன்றைய தினம் சொல்லிக் கொண்டிருக்கிறது புதிய இந்தியா பிறக்கப் போகிறது. வரலாறு அதற்கு சாட்சி பகரும். நாம் ஒரு இலக்கை வைத்திருக்கிறோம். 2047-ல் மோடி கனவு காணும் சாவர்க்கரின் இந்தியாவா அல்லது உமரின் இந்தியாவா என்கிற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உமர்களை தேடிக்கொண்டிருக்கிறோம். 2047-ல் உமரின் இந்தியாவை உருவாக்குவோம். இதற்காக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற பேரியக்கத்தின் கீழ் இந்தியாவில் 2.50 லட்சம் ஹம்சாக்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் உமரின் இந்தியாவை உருவாக்குவதற்காக தங்களது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு இழப்பு ஏற்பட்டு விட்டால், அதற்காக கலங்கி நிற்கும் கூட்டமல்ல இது. கொண்ட லட்சியத்துக்காக உயர் துறக்கும் கூட்டம் இது” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் தமிழகம், கேரளா, கர்நாடகா, உ.பி. போன்ற மாநிலங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, கர்நாடகாவிலும், கேரளாவிலும் இந்த அமைப்பை தடை செய்ய ஆலோசனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் வன்முறையைத் தூண்டும் வகையிலும், தேசத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, இந்த அமைப்பை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கும் அதேசமயம், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய இந்தப் பேச்சாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்பினரும், நடுநிலைவாதிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.


Share it if you like it