14 வயது சிறுமியில் இருந்து தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் போக்ஸோவில் கைது!

14 வயது சிறுமியில் இருந்து தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் போக்ஸோவில் கைது!

Share it if you like it

14 வயது சிறுமியில் இருந்து திருமணமாகியும் விடாமல் தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாதிரியார் போக்ஸோவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ளது கீழக்கோட்டை கிராமம். இங்கு ஆசிர்வாத சகோதர சபை என்கிற பெயரில் பெந்தேகோஸ்தே தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் ஜோஸ்வா என்பவர் பாதிரியாராக இருந்து வந்தார். 40 வயதாகும் இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மேலும், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை உடலுறவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துகொண்டு சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.

இந்த நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த அப்பெண்ணுக்கு கடந்தாண்டு திருமணமானது. தற்போது, அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனாலும் விடாத பாதிரியார் வினோத் ஜோஸ்வா, அப்பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பாதிரியார் வினோத் ஜோஸ்வா, பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தலைமறைவான பாதிரியாரை போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.


Share it if you like it