சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தேர்தலில் போட்டியிட நான் எதற்கும் அஞ்ச மாட்டேன், தேவைப்பட்டால் கூட்டணிக் கட்சி இல்லாது தனியாக கூட போட்டியிடுவேன். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, நம் கட்சியினரை வெற்றி பெற வைப்பேன். 10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் பிரதமர் மோடி. தவளையும் எலியும் சேர்ந்து அமைத்ததுதான் இந்தியா கூட்டணி. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை விட ஒரு படி மேலே சென்று நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை முறித்து கொண்டு வெளியேறியுள்ளார். இந்தியா கூட்டணியில் கடைசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்.