சமீபத்தில் சீனாவில் உள்ள ஹாங்சோவில் மாற்று திறனாளிக்குக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைப்பெற்றது. அதில் இந்திய தடகள வீரர்கள் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என 111 பதக்கங்கள் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி பதக்கங்கள் வென்ற வீரர்கள் அனைவரையும் அழைத்து பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இந்திய விளையாட்டு வீரர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. அவர்களின் சாதனைகள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறன்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.