டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தேஜஸ் எம்.கே.1 ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. மொத்தம் 123 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை ஒப்பந்தம் வழங்கி உள்ளது. இதில் 30 விமானங்கள், விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று காலை பிரதமர் மோடி பெங்களூரு சென்றார். அங்கு, பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.