இன்று பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் சுமார் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான அளவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க சென்றுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை,சுகாதாரம்,விமான போக்குவரத்து, உயர்கல்வி போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.
மேலும் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் சுமார் 12,600 கோடி மதிப்பில் சாலை வசதிகள்,எரிவாயு குழாய் அமைத்தல் ,ரயில்வே,சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.