இன்று பேரணி நடத்தும் பிரதமர் மோடி !

இன்று பேரணி நடத்தும் பிரதமர் மோடி !

Share it if you like it

மக்களவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாஜக கால்பதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழகத்தில் பம்பரம் போல் சுற்றி சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- கூச் பெஹார் மக்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பேரணி. அங்குள்ள மக்கள் எங்களது வளர்ச்சித் திட்டத்திற்கு பெரிதும் ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் பாஜக மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it