வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்தும் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பாரதியார் போன்ற கவிஞர்களின் வீரமிக்க வரிகளை மேற்கோள் காட்டி இன்று வரை பேசி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
மாதம் ஒருமுறை மனதின் குரல் மூலம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக இந்திய மக்களிடம் உரையாற்றி வருகிறார். சாதனை படைத்த முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், குழந்தைகள், மாணவர்கள், என பலர் செய்து வரும் சாதனைகள் பற்றியும் பெண்களின் உழைப்பு, தியாகம், குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, மாவட்ட பெண்களின் முயற்சியை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.