சமீபத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கோவா சென்றுள்ளார். அன்று உலக விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அதனால் அங்கு அவருக்கு ஒரு குடும்பத்தினர் நாய்க்குட்டி ஒன்றினை கொடுத்துள்ளனர். அதை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வந்துள்ளார் ராகுல்காந்தி. அந்த நாய்க்குட்டியை தனது அம்மாவான சோனியா காந்தியிடம் பரிசாக கொடுத்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.மேலும் அந்த நாய்க்குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் AIMIM கட்சியை சேர்ந்த முகம்மது பார்ஹான் என்பவர், நாய்க்குட்டிக்கு நூரி என்று பெயரிட்டிருப்பது தங்கள் மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதாக கூறி உத்திரபிரதேச மாநிலம் பிராக்யராஜ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.