கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷ் அவர்களது ஆலையில் பண்ருட்டி மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி கோவிந்தராஜ் அவர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக மர்மமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கோவத்தையும், ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பா.ஜ.க மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு பின்பு தி.மு.க எம்பியை கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்து இருக்கும் நிலையில் பிரபல ஊடகமான புதிய தலைமுறை கைது செய்யப்பட்ட கடலூர் எம்பி பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்று பொய் செய்தியை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.