நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது என ஆளுநர். ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் இவ்வாறு பேசினார் : குழந்தைகள், குடும்பத்தினர் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருகிறது. நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக் செல்கின்றனர் என கூறினார்.