காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் ப.சிதம்பரம். அண்மையில், இவர், பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எதிர்கட்சிகளை ஒன்றினணத்து பா.ஜ.க.வை அகற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் கூட ராகுல் காந்தி இருக்க கூடாது என்ற ரீதியில் ப.சிதம்பரத்தின் இந்த கருத்து அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.