அடுத்த மாதம் 5 மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி. அந்த கூட்டத்தில் பல பேர் இருசக்கர வாகனங்களில் பங்கேற்றனர். அப்போது உணவகம் ஒன்றினுள் நுழைந்து தோசை சுட்டுள்ளார். தேர்தல் நெருங்கி விட்டது தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள் என்றால், ராகுல்காந்திக்கு பசி எடுத்து எடுத்துவிட்டது போல் இருக்கிறது. அதனால்தான் உணவகம் சென்று தோசை சுட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.