அமெரிக்காவில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்று இருக்கிறார். இதையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்தப்படாமல் அவமதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இச்சம்பவம்தான், இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.