கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து சீனாவில் உள்ள ஹாங்சோ மாகாணத்தில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நிறைய பதக்கங்களை இந்தியா வென்று அசத்தியுள்ளது. பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி தனது வாழ்த்து கூறி பாராட்டி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே வருகிறார். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் 400மீ ரிலே தொடர் ஓட்டத்தில் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்த அன்பழகன் தமிழ்ச்செல்வி ஆகிய தம்பதியரின் மகன் ராஜேஷ் என்பவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அவரது தாயார் தமிழ்ச்செல்வி ஒலிம்பிக்கிலும் தனது மகன் தங்கப்பதக்கம் வெல்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.