ரஜினி, இளையராஜா-வை அவமதித்தாரா? வைரமுத்து..!

ரஜினி, இளையராஜா-வை அவமதித்தாரா? வைரமுத்து..!

Share it if you like it

இந்திய திரை உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஆகச் சிறந்த இசையமைப்பாளகளில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. கோடிகணக்கான ரசிகர்களுக்கு இன்றும் தனது பாடல்கள் மற்றும் திரை இசையின் மூலம் விருந்து படைத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை வென்றவர்.  மேலும் உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் தொடர்ந்து பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்து வரும் இளையராஜாவின் திறமையை போற்றும் விதமாக மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு பத்ம விபூஷன் விருதினை இசைஞானிக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து  அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், என பலர் தங்களது வாழ்த்துக்களை இசை கடலுக்கு தெரிவித்து இருந்தனர். சிறந்த ஆன்மீகவாதியும், தேச பக்தருமான, இளையராஜாவிற்கு நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்ட பொழுது தனது பாராட்டுக்களையோ, வாழ்த்துகளையோ, கூறாமல் கள்ள மெளனம் காத்தவர் இந்த வைரமுத்து.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகே பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி அவரை கெளரவப்படுத்தி இருந்தது.  இதனை பொறுத்து கொள்ள முடியாது ஆபாச கவிஞர் வைரமுத்து அவர்கள் ரஜினி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொண்டதோடு. கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜாவிற்கும் ஒன்றிய அரசு பால்கே விருதினை வழங்க வேண்டும் என்று தனது கோரிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

பத்ம விபூஷன் விருது இசைஞானிக்கு வழங்கபட்ட பொழுது பாராட்டு தெரிவிக்காமல் இருந்த வைரமுத்து. பால்கே விருதினை மேற்கூறிய நபர்களுக்கும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை நாட்டு மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.


Share it if you like it