எனக்கு சேர் போடு… எழுந்து போ… அரசு போக்குவரத்து கழக அதிகாரியை மிரட்டிய தி.மு.க. கிளை செயலாளர்!

எனக்கு சேர் போடு… எழுந்து போ… அரசு போக்குவரத்து கழக அதிகாரியை மிரட்டிய தி.மு.க. கிளை செயலாளர்!

Share it if you like it

ராமநாதபுரத்தில் தனக்கு சேர் போடாததால் ஆத்திரமடைந்த தி.மு.க. கிளை செயலாளர், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளை மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு கோஷ்டி, பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலும், இன்னொரு கோஷ்டி எம்.எல்,.ஏ.வும், மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் தலைமையிலும் இயங்கி வருகிறது. இந்த சூழலில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புறநகர் கிளை வளாகத்தில், தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் கிளைத் தலைவரும், பொருளாளர் நாகராஜனும் இணைந்து மண்டல மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். இவர்கள், அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த தி.மு.க.வின் தொ.மு.ச. கிளைச் செயலாளர் செல்வகுமார், எனது அனுமதி இல்லாமல் இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்று கேட்டு மண்டல மேலாளர் பத்மகுமாரை மிரட்டுகிறார். மேலும், “எனக்கு உக்கார  சேர் வேண்டும்; நீங்கள் எழுந்து போங்கள்” என்று மண்டல மேலாளரை மிரட்டும் தொனியில் கூறுகிறார். தொடர்ந்து, “மாவட்டச் செயலாளரை கூட்டி வரவா, வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா” என்றும் மிரட்டுகிறார். இச்சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிடவே, தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Share it if you like it