அன்று தட்டி கேட்டதால் அசம்பாவிதம் தடுத்த ரஞ்சனா நாச்சியார், இன்று யாரும் கேட்காததால் வாழ்க்கையை தொலைத்த மாணவன் !

அன்று தட்டி கேட்டதால் அசம்பாவிதம் தடுத்த ரஞ்சனா நாச்சியார், இன்று யாரும் கேட்காததால் வாழ்க்கையை தொலைத்த மாணவன் !

Share it if you like it

குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியிலிருந்து வீடுகளுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொல்லச்சேரி நான்கு சாலையிலிருந்து குன்றத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் வந்தனர்.

அப்போது குன்றத்தூர் தேரடி அருகே வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்ததில் அவனது காலில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் இரண்டு கால்களும் தூண்டானது. இதனை கண்டதும் படியில் தொடங்கி வந்த சக மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் பள்ளி மாணவனின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காயமடைந்த மாணவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் இரண்டு கால்களும் துண்டான சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட பள்ளிக்கு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களை போல் படிக்கட்டில் தொங்கியபடியும் அரசு பேருந்துகளின் மேற்கூறையில் ஏறியபடியும் சாகசங்கள் செய்தபடி ஆபத்தான முறையில் செயல்வது இந்த பகுதியில் அதிக அளவில் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனை நேரில் சந்தித்துள்ள ரஞ்சனா நாச்சியார், என் நெஞ்சு பதைக்கிறது. இப்படி எல்லாம் நடந்துவிடக்கூடாது என்றுதான் அன்று நான் கண்டித்தேன் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

சமீபத்தில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை மனிதாபிமானத்துடன் தனி ஒரு பெண்ணாக தட்டி கேட்ட பாஜக மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்து பின் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it