சென்னை பரங்கி மலையில் 26,032 சதுரடி அரசு நிலத்தை சான்ட்ராடான் கல்லின்ஸ் என்பவர் எவ்வித அரசு அனுமதியும் இன்றி வீடு மற்றும் சுற்றுச்சுவர் கட்டி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அரசு நிலத்தை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 18.10.2022 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அவரது மனுவை நிராகரித்து நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் உத்தரவு பிறப் பித்திருந்தார்.
அதன் அடிப்படையில், சுமார் (182 கோடி மதிப்புள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்த மான நிலத்தை நேற்று வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.