திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 4.2 ஏக்கர் விவசாய நிலங்கள், பழநி சண்முக நதி மற்றும் கோதைமங்கலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, கோயில் தேவஸ்தானத்தி டம் ஒப்படைக்குமாறு அறநிலை யத் துறை இணை ஆணையர் பாரதி உத்தரவிட்டார். அதன்படி, உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், ரூ.2 கோடி மதிப்பிலான 4.2 ஏக்கர் நிலங்களை மீட்டு, பழநி கோயில் உதவி ஆணையர் லட்சுமியிடம் ஒப்படைத்தனர்