இந்தியாவை இந்து நாடாக அறிவித்து விடுங்கள்… அமெரிக்க எழுத்தாளர் வேண்டுகோள்!

இந்தியாவை இந்து நாடாக அறிவித்து விடுங்கள்… அமெரிக்க எழுத்தாளர் வேண்டுகோள்!

Share it if you like it

ஹிந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என பிரபல அமெரிக்க எழுத்தாளர் வேண்டுகோள் விடுத்து இருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இஸ்லாமியர் ஒருவர் சிவலிங்கம் குறித்து தனியார் ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, பா.ஜ.க. தேசிய முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா. குரானில் இருந்து சில தகவல்களை மேற்கொள் காட்டி பேசியிருந்தார். இதற்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட பிரபல ஆங்கில எழுத்தாளர் ரெனீ லின், நூபுர் ஷர்மாவின் 3 அறிக்கைகள் மூலம் முஸ்லிம்கள் அவருக்கு கொலை மிரட்டல்களை அனுப்ப ஆரம்பித்துள்ளனர். பூமி தட்டையானது, முஹம்மது ஒரு குதிரையை பறக்கவிட்டார், முஹம்மது ஆயிஷாவை 6 வயதில் மணந்தார். நுபுர் ஷர்மா கூறியது குரானிலோ, ஹதீஸிலோ எழுதப்படவில்லை என்று எந்த இஸ்லாமிய அறிஞரும் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவரை, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் நேற்று காலை கழுத்தை அறுத்துக் படுகொலை செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மருத்துவ நிபுணரான உமேஷ் கோல்ஹே என்பவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்கா கடந்த ஜூன் 21 அன்று படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

இப்படியாக, தொடர்ந்து ஹிந்துக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்படும் சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும் ஹிந்துக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின், நேரமாகிவிட்டது..! இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it