போலீஸ் அதிகாரி சட்டையை இழுத்த காங்., தலைவர்!

போலீஸ் அதிகாரி சட்டையை இழுத்த காங்., தலைவர்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ரேணுகா சௌத்ரி. இவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை அமைச்சராக இருந்தவர். இவரது, பேச்சில் அதிகார திமீர், ஆணவம் அடங்கி இருக்கும் என்பது பலரின் குற்றசாட்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி கொண்டு இருந்தார். அப்பொழுது, அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் சத்தமாக சிரித்து கொண்டு இருந்தார். இவரது, செயலை கண்டு கடும் கோவம் அடைந்த சபாநாயகர் வெங்கய்யா நாயுடு ஏன்? இப்படி சிரிக்கிறீர்கள் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார். சபாநாயகர் கருத்தை காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் பலமாக சிரித்து கொண்டே இருந்தார்.

இதையடுத்து, களத்தில் இறங்கிய பாரதப் பிரதமர் மோடி சபாநாயகர் அவர்களே ரேணுகா சௌத்ரி சிரிப்பதை தடுக்க வேண்டாம். ராமாயணத் தொடரை முதல் முறையாக பார்க்க துவங்கியதில் இருந்து. இது போன்றதொரு சிரிப்பை இன்று பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று சூர்ப்பணகையை மேற்கொள் காட்டி பேசியிருந்தார். இதையடுத்து, ரேணுகா சௌத்ரி எப்பொழுது சிரிக்க நினைத்தாலும் அவர் கண் முன்னே பிரதமர் மோடி வந்து போவார் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அராஜக வழியை கடைப்பிடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா செளத்ரி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் ஆடையை பிடித்து இழுத்து அவமதித்துள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it