கேள்வி மேல் கேள்வி… துளைத்தெடுத்த நிருபர்கள்: விழிபிதுங்கிய ஆர்.எஸ்.பாரதி!

கேள்வி மேல் கேள்வி… துளைத்தெடுத்த நிருபர்கள்: விழிபிதுங்கிய ஆர்.எஸ்.பாரதி!

Share it if you like it

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை, செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நெஞ்சுவலி காரணமாக நீதிமன்றக் காவலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதான், செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆர்.எஸ்.பாரதியை துளைத்தெடுத்திருக்கிறார்கள். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஆர்.எஸ்.பாரதி விழிபிதுங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆர்.எஸ்.பாரதியை திணறடித்த கேள்விகளில் சில… செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்டானதும் நேரில் சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின், மறைந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி இருந்தபோது ஏன் சென்று பார்க்கவில்லை? செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி இலாக்காவை மாற்றும்படி பொய் சொன்னது ஏன்?

இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்டு ஆர்.எஸ்.பாரதியை திணறடித்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it