ஓய்வுப் பெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்து தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு ஒப்புதல் பெறுவதற்கான ஆவணத்தையும் ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் இந்த ஆவணத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசுக்கு சில கேள்விகளையும் எழுப்பிள்ளார். நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக வெளியிடப்பட்டதா என எனவும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள ஆளுநர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்களையும் கேட்டுள்ளார்.