தமிழக முதல்வருக்கு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை!

தமிழக முதல்வருக்கு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை!

Share it if you like it

பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தாம்பரம் பகுதி தலைவர் ஸ்ரீ சீதாராமன் அவர்கள் வீட்டில் 24 செப் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பிரபு என்பவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களை ஆர்.எஸ்.எஸ். கண்டிக்கிறது. இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து. அவர்களை, விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிந்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உயிர் மற்றும் உடமைகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க, இவ்விஷயத்தில் தமிழக முதல்வர், தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் துரிதமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

இரா. வன்னியராஜன் தலைவர் – ஆர்.எஸ்.எஸ். (கேரளா, தமிழ்நாடு  


Share it if you like it