ஆர்.எஸ்.எஸ். என்பது கற்பூர வாசனை: தி.மு.க.விற்கு அது தெரியாது – பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சரவெடி!

ஆர்.எஸ்.எஸ். என்பது கற்பூர வாசனை: தி.மு.க.விற்கு அது தெரியாது – பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சரவெடி!

Share it if you like it

பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன், தினமலர் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தி.மு.க.வை வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்ரீனிவாசன் கூறியதாவது;

ஆர்.எஸ்.எஸ். மீதி நடவடிக்கை எடுப்பது என்ன? நியாயம் இருக்கிறது. எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் விதமாக பேசியிருக்கிறார். எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியிருக்கிறார். எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் புத்தகங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ எழுதி இருக்கிறார். இதற்கு, ஏதேனும் ஒரு உதாரணம் காட்ட முடியுமா? ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் மீது மதநல்லிணக்கத்திற்கு எதிராக பேசினார் என்று ஒரு வழக்கு உண்டா எதுவும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான சிந்தனை கொண்டது. இதற்கு, எல்லாம் ஆர்.எஸ்.எஸ் பயப்படும் இயக்கம் அல்ல. ஆர்.எஸ்.எஸ். தியாகத்தால் உருவானது. ஆர்.எஸ்.எஸ். என்பது கற்பூர வாசனை. அந்த கற்பூர வாசனை தி.மு.க.விற்கு தெரியாமல் போனதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. தி.மு.க.விற்கு கற்பூர வாசனை தெரியாது.

வலிமையான சர்வாதிகாரியாக, இருந்த இந்திர காந்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஊர்வலங்களுக்கு தடை விதித்தார். அதன்பின்னர், அனைத்தையும் திரும்ப பெற்ற வரலாறு இருக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ( மறைந்த முன்னாள் முதல்வர் ) நம்பூதிரி பாட். ஆர்.எஸ்.எஸ். நசுக்கி விடுவேன் என்று கூறினார். ஆனால், லட்சகணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் மிகப்பெரிய ஊர்வலத்தை பார்த்து விட்டு தான் அவர் செத்து போனார். எவ்வளவோ வலிமையானவர்கள் எல்லாம் மோதி மண்டை உடைந்து போய் இருக்கிறார்கள். இப்போது ஸ்டாலின் மோத துவங்கி இருக்கிறார் என பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it