4 பேரை 40 பேராக்கிய தி.க..!

4 பேரை 40 பேராக்கிய தி.க..!

Share it if you like it

வள்ளலார் கோவிலில் உள்ள மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பயிற்சி (ஷாகா) மேற்கொண்டு இருந்தனர். அப்பொழுது, அங்கு வந்த தி.க, தி.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஜ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், அதே இடத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி மேற்கொண்டு தி.க. கும்பலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

இந்திய மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த சேவை மனப்பான்மை ஓர் கொண்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பை சேர்ந்த 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் கோவிலில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.க, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அங்கிருந்த சுயம் சேவகர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

வழக்கம் போல, தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகங்கள் மற்றும் இணையதள ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை பொதுமக்கள் விரட்டி அடித்தனர் என்று பொய் செய்திகளை பரப்பியது. இதனையடுத்து, உள்ளூரைச் சேர்ந்த பா.ஜ.கவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மறுநாள் காலை அதே இடத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். இதற்கு முன்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் தற்பொழுது வேடிக்கை பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

/https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=687020222424884


Share it if you like it