கிரேட் கிரிகாலனாக மாறிய ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள்?

கிரேட் கிரிகாலனாக மாறிய ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள்?

Share it if you like it

தஞ்சாவூரை சேர்ந்த நபர் ஒருவர் காரில் சென்று இருக்கிறார். அவரிடம், முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி போக்குவரத்து காவலர்கள் அவரது வண்டியை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்து இருக்கின்றனர். இதையடுத்து, போக்குவரத்து காவலர்கள் அந்த நபருக்கு அபராதத்தை விதித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, அவர் அபராத தொகையான ரூ. 14,000 செலுத்தியுள்ளார். இதையடுத்து, தனது வண்டியை எடுக்க சென்ற அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆம், காரில் இருந்த பேட்டரி, ஸ்டெப்னி உள்ளிட்ட பொருட்களை காணவில்லை.

இதனை தொடர்ந்து, அந்த நபர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறார். எனினும், அவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும், அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it