சாய்னா நேவாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : மெளனம் காக்கும் – ஜோதிமணி – சுந்தரவள்ளி..!

சாய்னா நேவாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : மெளனம் காக்கும் – ஜோதிமணி – சுந்தரவள்ளி..!

Share it if you like it

பிரபல  பேட்மிண்டன் வீராங்கனையை இழிவுப்படுத்திய நடிகர் சித்தார்த்.  

பல்வேறு நலத்திட்ட பணிகளை, தொடங்கி வைக்க. பாரதப் பிரதமர் மோடி சில தினங்களுக்கு, பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று இருந்தார். பிரதமருக்கு மிக கடுமையான, அச்சுறுத்தல் இருந்து வரும் சூழ்நிலையில், முறையான பாதுகாப்பினை வழங்காமல், காங்கிரஸ் அரசு அவரை அவமதித்து இருந்தது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், மாநில முதல்வர்கள், என்று நாடும் முழுவதும் பிரதமர் நலன் குறித்து தங்களது எண்ணத்தையும், கருத்தினையும், பதிவு செய்து இருந்தனர். பிரதமரின் உயிரில் அலட்சியம், காட்டி இருப்பதன் பின்னணியில் சர்வதேச சதி இருக்குமோ ? என்னும் ஐயம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. அது குறித்த விசாரணை தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல விளையாட்டு வீராங்கனை, சாய்னா நேவால். பிரதமர் நலன் குறித்தும், அவர் பாதுகாப்பில் ஏற்பட்ட, குளறுபடி குறித்தும் தனது எண்ணத்தை தெரிவித்து இருந்தார். இதற்கு தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர், என்று கூறப்படும் நடிகர் சித்தார்த். நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவாலை, ஒரு பெண் என்று கூற பார்க்காமல். மிகவும் ஆபாசமாக விமர்சிக்கும் வகையில், தனது கருத்தினை பதிவு செய்து இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெண்களின் உரிமைக்காக, போராடுவதாக கூறிக்கொள்ளும். கனிமொழி, சுந்தரவள்ளி, ஜோதிமணி, போன்றவர்கள் சாய்னா நேவாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஏன்? வாய் திறக்க முன்வரவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Share it if you like it