ஊரிலும் இருக்க முடியாது… உயிரோடும் இருக்க முடியாது… வாக்களித்த வார்டு மக்களை மிரட்டிய தி.மு.க. கவுன்சிலர்!

ஊரிலும் இருக்க முடியாது… உயிரோடும் இருக்க முடியாது… வாக்களித்த வார்டு மக்களை மிரட்டிய தி.மு.க. கவுன்சிலர்!

Share it if you like it

குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பான பிரச்னையில், வார்டு மக்களை ஊரிலும் இருக்க முடியாது, உயிரோடவும் இருக்க முடியாது என்று தி.மு.க. கவுன்சிலர் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அக்கட்சியினரின் அராஜகம், அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அரசு அதிகாரிகள் முதல் வாக்களித்த மக்கள் வரை அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். அந்த வகையில், சேலம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், தனக்கு வாக்களித்த மக்களையே, ஊரிலும் இருக்க மாட்டீர்கள், உயிரோடும் இருக்க மாட்டீர்கள் என்று மிரட்டி இருக்கிறார்.

சேலம் மாநகராட்சி 18-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சர்க்கரை சரவணன். இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பாக, சரவணனுக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, பெண்கள் உள்ளிட்டோரை சரவணன், தகாத வார்த்தைகள் வசைபாடி இருக்கிறார். மேலும், ஒழுங்கு மரியாதையாக இருந்து கொள்ளுங்கள். உயிரோடு இருக்க முடியாது. ஊரிலும் வசிக்க முடியாது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தி.மு.க.வினரின் அராஜகத்தை வசை பாடி வருகின்றனர்.


Share it if you like it