கஞ்சா விற்பனை குறித்து துப்பு… காவல் நிலையத்தில் போலீஸ் முன்பே அ.தி.மு.க. தலைவர் மண்டை உடைப்பு!

கஞ்சா விற்பனை குறித்து துப்பு… காவல் நிலையத்தில் போலீஸ் முன்பே அ.தி.மு.க. தலைவர் மண்டை உடைப்பு!

Share it if you like it

சேலத்தில் கஞ்சா விற்பனை குறித்து துப்புக் கொடுத்த அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரை காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீஸார் முன்னிலையிலேயே மண்டையை உடைத்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் ரேஷன் அரிசிக் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது. இச்செயலில் அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா செந்தில் மற்றும் சத்யராஜ் ஆகியோர் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்திருக்கிறார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் கண்ணன் மீண்டும் புகார் தெரிவித்திருக்கிறார். இதையறிந்து அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்திற்குள் புகுந்து புகார் கொடுத்த கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், போலீஸார் முன்னிலையிலேயே அக்கும்பல் கண்ணன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணனின் மண்டை உடைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைப் பார்த்த பலரும் திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கி சந்தி சிரிப்பதாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it