தொண்டரை பொடனியிலேயே போட்ட அமைச்சர்: வீடியோ வைரல்… முடியலடா சாமி… புலம்பும் ஸ்டாலின்!

தொண்டரை பொடனியிலேயே போட்ட அமைச்சர்: வீடியோ வைரல்… முடியலடா சாமி… புலம்பும் ஸ்டாலின்!

Share it if you like it

மாநகராட்சி கவுன்சிலரை தலையிலேயே அடித்த சர்ச்சை தீர்வதற்குள், தொண்டரை போடனியிலேயே போட்டுத் தள்ளி மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்திருக்கிறது என்று பார்த்தால் அமைச்சர்களின் அடாவடிகள் அதற்கும் மேலாக இருக்கிறது. பஸ்ஸில் பெண்கள் இலவசமாகச் செல்வதை ஓசி பயணம் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார் அமைச்சர் பொன்முடி. அதேபோல, மனு கொடுக்க வந்த பெண்ணை தலையிலேயே அடித்து அடுத்த சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின்.

நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியபோது, காலையில் தூங்கி எழுந்தால் இன்று என்ன பிரச்னையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களோ என்கிற பதட்டத்துடனேயே விழிக்கிறேன். மேலும், இதனால் பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். என்ன முகத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும் என்று புலம்பித் தள்ளினார். எனினும், அமைச்சர்கள் அடங்கியதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் திருச்சியில் நடந்த குடிநீர் தொட்டி திறப்புவிழாவில் மாநகராட்சி கவுன்சிலரை தலையிலேயே அடித்து சர்ச்சையைக் கிளப்பினார் அமைச்சர் கே.என்.நேரு. இதன் பிறகு, கட்சி நிர்வாகிகளை கல்லைத் தூக்கி எறிந்து புதிய சர்ச்சையை கிளப்பினார் அமைச்சர் நாசர். இந்த சூழலில்தான், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்றிருந்தார்.

அவருக்கு, சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு, கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் மேளதாளத்துடன் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அமைச்சர் உதயநிதிக்கு நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை வழங்கினர். மேலும், அங்கு மேடை அமைத்து கட்சி நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், தொண்டர்கள் வரிசையாக சென்று உதயநிதியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, ஒரு தொண்டார் உதயநிதிக்கு சால்வை அணிவிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு, அந்த தொண்டரின் பொடனியிலேயே ஒரு போடு போட்டு வெளியே தள்ளினார். மேலும், உதயநிதியை பார்த்துவிட்டு தொண்டர்களை வேகமாகச் செல்லும்படி அதட்டியும், அடி கொடுத்தும் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது இணையதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, ஸ்டாலினை தூங்கவே விடமாட்டாங்க போல என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it