பிரதமரை விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு – சவுக்கு சங்கர் பாய்ச்சல்!

பிரதமரை விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு – சவுக்கு சங்கர் பாய்ச்சல்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய தி.மு.க.வினருக்கு என்ன தகுதி இருக்கு என மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பி இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. எனினும், அதனை குறை சொல்வதையே தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக கொண்டு இருக்கிறார். அதனை வழிமொழியும் விதமாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சேப்பாக்க எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

இப்படிபட்ட சூழலில், பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஆதன் இணையதள ஊடக நெறியாளர் மாதேஷிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்;

எத்தனை பத்திரிகையாளர்கள் சந்திப்பினை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தி இருக்கிறார். பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்வதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கு. முதலில் நீங்கள் எத்தனை பத்திரிகையாளர்கள் சந்திப்பினை நடத்தி உள்ளிர்கள் என்று தமிழக முதல்வரை சாடியிருக்கிறார். இதுகுறித்தான, கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it