நிருபருக்கு சீமான் கொலை மிரட்டல்!

நிருபருக்கு சீமான் கொலை மிரட்டல்!

Share it if you like it

பத்திரிகையாளருக்கு சீமான் கொலை மிரட்டல் விடுத்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கட்சியில் இருக்கும் சொச்சம், மிச்சம் தம்பி தங்கைகள் கூட மாற்று கட்சிகளுக்கு ஓடிவிடக் கூடாது என்பதற்காக, இன்று ஒரு தகவல் போல தினம் ஒரு கதையை அவர்களுக்கு கூற கூடியவர். பிறவியிலேயே, காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை ரசிப்பதாக கூறியிருந்தார். தம்பி நான் சென்று இலங்கையில் பாடி விட்டு வரட்டுமா? என்று எஸ்.பி.பி. தன்னிடம் அனுமதி கேட்டார் என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தனது முதுகில் கொட்டிய விஷத்தேள் இறந்ததை பற்றி கூறியிருந்தார். இப்படியாக, சீமான் அள்ளி விடும் கதைகள் ஏராளம்.

அதேவேளையில், நாகரிகம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி மேடையில் பேசுவதை இன்று வரை வாடிக்கையாக கொண்டவர். இதுதவிர, பத்திரிகையாளர்களை ஒருமையில் அழைப்பது அவதூறாக பேசுவது என சீமானின் பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பத்திரிகையாளர்களை மீண்டும் சீமான் சந்தித்து இருக்கிறார். அப்போது, ஜெ நியூஸ் நிருபர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த சீமான், உன் மண்டையை உடைத்து விடுவேன் என ஆவேசமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it