ராம் லல்லாவின் வசீகரிக்கும் முகத்தைப் பார்த்த போது எனக்குள் பரவசத்தை ஏற்படுத்தியது – நடிகை ரேவதி !

ராம் லல்லாவின் வசீகரிக்கும் முகத்தைப் பார்த்த போது எனக்குள் பரவசத்தை ஏற்படுத்தியது – நடிகை ரேவதி !

Share it if you like it

பல கட்ட போராட்டங்களை தாண்டி கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில் கடந்த 22ஆம் தேதி குடமுழுக்குடன் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான திரைபிரபலங்கள், சாதுக்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக நடிகை ரேவதி பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது பேசப்பட்டு வருகிறது. 80கள் மற்றும் 90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ரேவதி. தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்கி வருகிறார். அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்ற படத்தை ஒரு வருடத்திற்கு முன் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், நேற்று ஒரு மறக்க முடியாத நாள். நானா இப்படி.. ராமரின் முகத்தை பார்த்ததும் வந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது. ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுள்ளார்.


Share it if you like it