சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கபட்டுள்ளது. இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சீமான் எச்சில் துப்பிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து, அவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், சீமானுக்கா சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது? என நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும், அவர் பொது இடத்தில் எச்சில் துப்பிய காணொளிகளை சமூகவலைதளத்தில் அவர்கள் பரப்பி வருகின்றனர்.