நாம் தமிழர் கட்சி 13- ஆம் ஆண்டுடில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அந்த வகையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி, மகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். இதையடுத்து, 2 அடி உயரமுள்ள தங்க வேலை திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்திடம் சீமான் வழங்கினார். இச்சம்பவம், காட்டுத்தீ போல தமிழகம் முழுவதும் பரவியது. தனது வீட்டிற்கு வேண்டிய மளிகை சாமான்களை, வாங்குவதற்கே தம்பிகளிடம் கையேந்துபவர் சீமான். அப்படியிருக்க, இவரால் எப்படி தங்கவேலை காணிக்கையாக கொடுக்க முடியும் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீமான் வழங்கியது தங்கவேல் அல்ல அது தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி வேல் என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் தந்துள்ளனர்.