பாஸ்போர்ட் இல்லாமல் அமெரிக்கா சென்று திரும்பினேன் – சீமான் புதுதகவல்!

பாஸ்போர்ட் இல்லாமல் அமெரிக்கா சென்று திரும்பினேன் – சீமான் புதுதகவல்!

Share it if you like it

பாஸ் போர்ட் இல்லாமல் தாம் அமெரிக்க சென்று வந்ததாக சீமான் கூறிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், அளந்து விடும் கட்டுகதைகளையும், பொய்களையும் கேட்க ஒரு மிகப்பெரிய கூட்டம் உண்டு. அப்பாவி, தம்பி தங்கைகள் சீமானின் பேச்சில் மயங்கி அக்கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், சீமானின் உண்மையான சுயரூபம் அறிந்த பின்பு பலர் கட்சியில் இருந்து ஓட்டம் எடுத்து வருகின்றனர். கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பொன்மொழி சீமானுக்கு பக்காவாக பொருந்தும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் அவர் கூறியதாவது ;

நான் எல்லாம் உண்மையை சொல்கிறேன். சத்தியபடிக்கு சொல்கிறேன். என் தலைவன் மீது ஆணையாக சொல்கிறேன். தப்பிச்சு ஓடிடலாம்னு பார்க்கிறேன் ஆனால் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அமெரிக்காரன், என்னை கைது செய்த போது அப்பவே சொன்னான். நீ இந்தியா போக வேண்டும் இங்கேயே இருந்து விடு என்று. ஆனால், நான்தான் கேட்கவில்லை என்று சீமான் கூறியிருக்கிறார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அறிவார்ந்த தம்பி தங்கைகளில் யாரேனும் ஒருவர் பாஸ்போர்ட் இல்லாமல் அண்ணா எப்படி? அமெரிக்காவிற்கு சென்றார். இது எப்படி? சாத்தியம் என்று அவரிடம் கேட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

எவ்வளவு பிட்டுகளைதான் இந்த காதுகள் தாங்கும் இதுக்கு ஒரு முடிவே இல்லையா தெய்வமே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it