நாம் தமிழர், ஆதித் தமிழர் இடையே குஸ்தி!

நாம் தமிழர், ஆதித் தமிழர் இடையே குஸ்தி!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கும், ஆதித் தமிழர் பேரவை அமைப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவரது, அதிரடி பேச்சு தமிழக மக்களிடையே பிரபலம். எனினும், இவரது கருத்துக்கள் சிலரின் உணர்வுகளை புண்படுத்துவது போல அமைந்து விடுகின்றன. அந்த வகையில், அருந்ததியினர் குறித்து சீமான் தெரிவித்த கருத்து அச்சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வகையில், ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கல் வீசியதில் நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it