உள்ளாட்சி தேர்தல்: மூன்றாவது பெரிய கட்சியாக NTK மாறும் ஆருடம் சொன்ன ராம்ஜீ…

உள்ளாட்சி தேர்தல்: மூன்றாவது பெரிய கட்சியாக NTK மாறும் ஆருடம் சொன்ன ராம்ஜீ…

Share it if you like it

பிரபல ஜோதிடர் ராம்ஜீ என்பவர் உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறும் என்று அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

பணவெறி, படை பலம், அதிகார பலம், என அனைத்தையும் பயன்படுத்தி, கடந்த பிப்-19 அன்று உள்ளாட்சி தேர்தலை ஆளும் கட்சி நடத்தியது. ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியே இந்த வெற்றியை தி.மு.க அரசு பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் கூறும் அவலநிலையை ஏற்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், ஓட்டிற்கு பணமோ, பரிசு பொருளோ என எதனையும் வழங்காமல். நேர்மையான வேட்பாளர்களை களத்தில் இறக்கி, 300-க்கும் மேற்பட்ட இடங்களில், பா.ஜ.க அமோக வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சியாக மாறியுள்ளது. பா.ஜ.க-வின் இந்த அசுர வளர்ச்சி எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான், பிரபல ஜோதிடர் ராம்ஜீ நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறும் என்று அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it